மின் கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - முத்தரசன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மின் கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். நூற்பாலை தொழிலை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய முத்தரசன், பழங்குடியின மக்களை ஏமாற்றி நிலங்களை அபகரிக்கும் போக்கு கோவை மாவட்டத்தில் அதிகமாக நடந்து வருவதாகவும் கூறினார்

Night
Day