மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

செருதூரை சேர்ந்த தங்கதுரை என்பவர் தனது பைபர் படகில், மகன் உட்பட 3 பேருடன் சேர்ந்து நேற்று காலை கடலுக்கு சென்றுள்ளார். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 3 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் செருதூர் மீனவர்களை மிரட்டி தாக்கி ரகளை செய்துள்ளனர். பின்னர், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான படகு என்ஜின், வலை, செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதனால் காயங்களுடன் பரிதவித்த மீனவர்கள் மீட்கப்பட்டு, நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அரங்கேறும் அட்டூழியங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day