முகப்பேர் ஜெ.ஜெ.நகரில் புதிய காவல் நிலையம் அமைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை முகப்பேர் ஜே ஜே நகரில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு இருந்த ஜே ஜே நகர் காவல் நிலையம் பழுதடைந்து காணப்பட்டதால் நொளம்பூர் காவல் நிலைய மேல் தளத்தில் செயல்பட்டு வந்தது. இதையடுத்து இப்பகுதி பொதுமக்‍களின் ​கோரிக்‍கையை ஏற்று ஒரு கோடியே 65 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய ஜே ஜே நகர் காவல் நிலையத்தை காணொளி காட்சி மூலமாக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் திறந்து வைத்தனர். காவல்துறை இணை ஆணையர் விஜயகுமார், ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் துணை ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்களுடன் குத்துவிளக்கு ஏற்றி காவல் நிலையத்தை திறந்து வைத்தார். 

Night
Day