முதலமைச்சரின் பிரச்சார கூட்டத்தால் நெரிசல் - சிக்கித் தவித்த ஆம்புலன்ஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற பிரசார கூட்டத்தால் ஐந்து மணி நேரத்துக்கு மேலாக திருவண்ணாமலை-திண்டிவனம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை அடுத்த சோ.காட்டுக்குளம் கிராமம் அருகே திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அமைச்சர் எ.வ.வேலுவின் ஏற்பாட்டின் பேரில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதியிலிருந்து ஏராளமானோரை பணம் கொடுத்து ஆடுமாடுகளைப் போல் வாகனங்களில் ஏற்றி திமுகவினர் அழைத்து வந்தனர். இதனால், திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டு வேட்டவலம் சாலையிலும், அவலூர்பேட்டை செல்லும் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 5 மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி தவித்தது. 

இது ஒருபுறம் இருக்க தேர்தல் விதிமுறைகளை மீறி மாநகராட்சியின் தற்காலிக கழிப்பறை வாகனங்கள் கொண்டுவரப்பட்டு திமுகவினர் பயன்படுத்தியது விமர்சனங்களை குவித்து வருகிறது. மேலும், திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை மேடையில் அமர வைக்காதததும் பேசுபொருளாகி உள்ளது. 

Night
Day