முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் தலைவர் ஜெய ராஜ ராஜேஸ்வரன், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக அரசு, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாகவும், வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை என்றும் தெரிவித்தார். இதனால், முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து அராஜகத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Night
Day