முன்னாள் அரசு வழக்கறிஞர்களுக்கு கட்டண பாக்கியை வழங்கக் கோரி வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கி 4 வாரங்களில் வழங்கப்படுமென தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அரசு வழக்கறிஞருக்கு கட்டணம் வழங்குவது தொடர்பான வழக்கில், கட்டணங்கள் முழுமையாக வழங்காதது ஏன்? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்த வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி கட்டண தொகையான 2 கோடியே 39 லட்சம் ரூபாய் 4 வாரங்களில் வழங்கப்படும் என்று தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Night
Day