முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ ரெய்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 சென்னை பாலவாக்கத்தில் உள்ள முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழக கோயில்களில் இருந்து மாயமான பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி-யாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது, திருவள்ளூர் டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா, சர்வதேச கடத்தல் கும்பலோடு சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் கடத்தியதாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி, காதர் பாஷா, பொன்மாணிக்கவேலுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொன் மாணிக்கவேல் மீதான புகாரை விசாரிக்க உத்தரவிட்டது. அதன்பேரில், பாலவாக்கத்தில் உள்ள பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

Night
Day