மூக்கையா தேவரின் மூத்த மகன் P.K.M. சுப்பிரமணியன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த P.K.மூக்கையா தேவரின் மூத்த மகன் P.K.M. சுப்பிரமணியன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த P.K.மூக்கையா தேவரின் மூத்த மகன் P.K.M. சுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

P.K.M. சுப்பிரமணியனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

varient
Night
Day