மூளைச்சாவு - 20 வயது இளைஞர் உடல் உறுப்புகள் தானம் - 6 நபர்களுக்‍கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவடைந்த 20 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 6 நபர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் சிக்‍கி மேல் சிகிச்சைக்‍காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டிருந்தார். ஆனால் இளைஞர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன்வந்தனர். அதன் அடிப்படையில் இளைஞரின் உடல் உறுப்புகள் ஆறு நபர்களுக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளன. இதன்பின்னர் இளைஞரின் உடலுக்கு மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Night
Day