மெட்ரோ ரயில் பணிக்காக போக்குவரத்து மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மெட்ரோ ரயில் பணிக்காக சென்னை புளியந்தோப்பில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில்   பணிகள் மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஸ்ட்ரகான்ஸ் சாலை பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளதால் அந்த பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வகையான வாகனங்களும் ஸ்ட்ரகான்ஸ் சாலைக்கு வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ட்ரகான்ஸ் பகுதி மக்கள், நியூ பெரன்ஸ் சாலை, செல்லப்பா தெரு ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day