மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னையில் நாளை முதல் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக நாளை பல்வேறு இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், சூளைமேடு குடிநீர் பகிர்மான நிலையத்திலிருந்து ஐயப்பன் நகர் முதல் சாய் நகர் இணைப்பு சாலை வரை நாளை காலை 11 மணி முதல் 8ம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதேபோல், கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட சின்மயா நகர், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. மேலும், அண்ணா நகர் மண்டலம், தேனாம்பேட்டை மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Night
Day