மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி முக்கொம்பு மேலணையை சென்றடைந்தது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விவசாயத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று திருச்சி முக்கொம்பு மேலணையை சென்றடைந்தது. திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகிய நிலையில், மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3-ஆம் தேதி 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீரானது இன்று முக்கொம்பு மேலணையை சென்றடைந்ததைத் தொடர்ந்து மதகு வழியாக வினாடிக்கு 370 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Night
Day