மேட்டூர் அணையை திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் கீழையூரில் சாலை மறியல் நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் அளவிலான தாளடி பயிர்கள் நீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளது. எனவே கருகும் தாளடி பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கீழையூர் கடைத்தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கைககிளில் கருகிய நெற்பயிர்களை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

Night
Day