மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, அணைகளுக்கு வரும் உபரிநீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் நீர்வரத்து காரணமாக 71வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு. வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 81 ஆயிரத்து 552 கனஅடியில் இருந்து 93 ஆயிரத்து 828 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மத்திய நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அணையின் நீர்மட்டம் 100 அடி எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Night
Day