மைசூருவில் உள்ள கல்வெட்டுகளை தமிழகத்திற்கு மாற்றக்கோரி வழக்கு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மைசூருவில் உள்ள தமிழக கல்வெட்டுகள் மற்றும் நகல்களை தமிழகத்திற்கு மாற்றக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக கோயில்களில் இருந்து பெறப்பட்டு, தற்போது மைசூரு கல்வெட்டு ஆய்வு மையத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் கல்வெட்டு எழுத்துகள் குறித்த நகல்களை தமிழகத்திற்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Night
Day