யாருக்கும் பயப்படும் நபர் நான் இல்லை - திமுகவை எதிர்த்து கேட்பேன் - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சின்னம்மா எழுச்சியுரை

எழுத்தின் அளவு: அ+ அ-

காட்சி மண்டபம் வரும் வழியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு, பொதுமக்‍கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட் வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

"இந்த பகுதியில் மழை வெள்ளத்தால் இடிந்த வீடுகளுக்கு இதுவரை தமிழக அரசு எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை" என அப்பகுதி மக்‍கள் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் தெரிவித்தனர். அவர்களுக்‍கு சின்னம்மா ஆறுதல் தெரிவித்தார்.

திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள காட்சி மண்டபம் பகுதிக்கு வந்த புரட்சித் தாய் சின்னம்மாவுக்‍கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து புரட்சித்தாய் சின்னம்மா தொண்டர்களிடையே உரையாற்றினார். திமுக ஆட்சியில் குடிநீர், போக்‍குவரத்து, மின்சாரம், சுகாதார வசதி, மருத்துவம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் பொதுமக்‍களுக்‍கு முறையாக அளிக்‍கப்படவில்லை என புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார். 

காட்சி மண்டபம் பகுதியில் குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகள் வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.



Night
Day