ரத்தன் டாடா மறைவு - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆழ்ந்த இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிப்பதாக தெரிவித்தார். மேலும் இந்திய தொழில்துறையின் தலைசிறந்த தலைவராகவும், பொதுநலம் மிக்க மனிதராகவும் இருந்த அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது என்றும், இந்திய வணிகத்திற்கும் சமூகத்திற்கும் இழப்பு என்றும் தெரிவித்தார்.

இதனிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "உலகம் முழுவதும் தனது புகழ்பெற்ற சாதனைகள் மூலம் நாட்டின் மதிப்பை உயர்த்திய டாடா குழுமத்தின் தலைவரும், தொழிலதிபருமான ரத்தன் டாடா, உலகத்திடம் விடைபெற்றதாக வேதனை தெரிவித்தார். 


Night
Day