ரயில் விபத்தை வைத்து ராகுல் அரசியல் செய்யக் கூடாது” - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரயில் விபத்து சம்பவத்தில் அரசியல் செய்யும், ராகுல்காந்தியின் செயல் சிறுபிள்ளைத்தனமானது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி திருக்கோவிலில் சாமிதரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும்போது கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்து குறைந்துள்ளதாகவும் ரயில்வே துறையினர் சிறப்பாகவும், வேகமாகவும் பணியாற்றிவருவதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி ரயில்வே துறையை உயர்ந்த தரத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும், சிறிய விபத்தைவைத்து ரயில்வேயை குறைகூற முடியாது என்றும் தெரிவித்தார்.

Night
Day