ராணிப்பேட்டை: சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 30 பேர் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்தனர். முதூர் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆணைபாளையத்திற்கு நெல் நாற்று நடவு பணிக்காக டிராக்டரில் சென்றனர். அப்போது, எதிரே வந்த வாகனத்திற்காக ஒதுங்கிய டிராக்டர், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 30 பேர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Night
Day