ராமநாதசுவாமி கோயில் நான்குரத வீதியில் வழிந்தோடும் கழிவுநீர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நான்கு ரத வீதியில் கழிவுநீர் வழிந்து ஓடுவதால் கோயிலுக்‍கு வரும் பக்தர்கள் கடும் அவதியுற்றனர். ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலுக்‍கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில் கிழக்குத் தெரு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் நிரம்பி வழிந்து கழிவுநீர் நான்கு ரத வீதியைச் சுற்றி ஓடுவதால் கோயிலுக்‍கு வரும் பக்தர்கள் பெரும் இன்னலுக்‍கு ஆளாகினர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதனை சீரமைக்‍க வேண்டும் என பக்தர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

Night
Day