ராமநாதபுரத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிய மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிய வழக்கில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்தது. தொண்டியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2020ஆம் ஆண்டு திருவாடானை டிஎஸ்பி-யாக இருந்த புகழேந்தி கணேஷ் உள்ளிட்ட காவல் அதிகாரிகள், சட்டவிரோதமாக வீட்டினுள் புகுந்து தன்னை காயப்படுத்தியதாகவும், போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தியபோது, காவல்துறையை பகைத்து கொள்ள வேண்டாம் என மிரட்டியதாக குற்றம் சாட்டிய கலந்தர் ஆசிக், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை விடுத்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

Night
Day