ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த கனமழை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், பட்டினங்காத்தான், பேராவூர், பழங்குளம் உட்பட ராமநாதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நண்பகலில் திடீரென கனமழை பெய்தது. இதனால், வீதிகளில் மழைநீர் பெருக்‍கெடுத்து ஓடியது. இம்மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்‍கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Night
Day