ராமநாதபுரம்: பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைக்கு கொண்டுவர வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக நடைமுறைக்கு கொண்டு வரக்கோரி சென்னை எழும்பூரில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பரமக்குடி நீதிமன்ற வளாகம் முன் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து பங்கேற்றனர். 

Night
Day