ராமநாதபுரம்: மக்காச்சோள பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அறுவடைக்கு தயாரான மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோவிலாங்குளம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. பயிர்கள் அமோக விளைச்சல் கொடுத்த நிலையில், அறுவடைக்கு தயாரான மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் முற்றிலுமாக சேதப்படுத்தி உள்ளன. இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், பலமுறை வனத்துறையிரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். 

Night
Day