ராமநாதபுரம்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் தர்ணா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். செல்வநாயகபுரம், கீரனூர், ஆணைசேரி, புல்வாய்குளம், கீழக்குளம், புளியங்குடி காக்கூர், விக்கிரபாண்டியபுரம், சாத்தனூர் உள்ளிட்ட பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதமானது. இந்த பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்காமல் அதிகாரிகள் விவயசாயிகளை அலட்சியப்படுத்தியுள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

Night
Day