ராமநாதபுரம்: வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய திருநங்கைகள் - போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரத்தில் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனா். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழக்கறிஞர் நாகசர்மா என்பவரை திருநங்கைகள் விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கறிஞர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day