ராமநாதபுரம்: விறுவிறுப்பாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோயில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள மூக்‍கம்மாள் கோவில் மாசி களரி திருவிழாவை முன்னிட்டு, பெரிய மாடு, சிறிய மாடு இரு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்‍கும், மாட்டு வண்டியை ஒட்டிவந்த சாரதிகளுக்‍கும் ரொக்‍கப்பரிசுகள் வழங்கப்பட்டன. 

Night
Day