ராமநாதபுரம்: 60 மாடுகளை வாங்கி பணம் தராமல் வியாபாரிகள் மோசடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

60 மாடுகளை வாங்கிக் கொண்டு 8 லட்ச ரூபாயை தராமல் ஏமாற்றியவர் மீது நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி வயதான தம்பதி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள களரி கிராம காலனி பகுதியைச் அழகர் மற்றும் அவரது மனைவி 
இருவரும் அளித்த மனுவில், கடந்த ஆண்டு தாங்கள் வளர்த்து வந்த 60 மாடுகளை சாயல்குடி பகுதியைச் சேர்ந்த 2 வியாபாரிகளிடம் ஒன்பது லட்சத்திற்கு விற்றதாக குறிப்பிட்டுள்ளனர். காவல்துறையினர் தங்களுக்‍கு ஓரு லட்ச ரூபாயை வாங்கி தந்ததாகவும் பேசியபடி மீதமுள்ள 8 லட்ச ரூபாயை அந்த வியாபாரிகளிடமிருந்து பெற்று தருமாறு கோரியுள்ளனர்.

Night
Day