ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் போரட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், இலங்கை அரசின் அராஜகத்தை கண்டித்து இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்து, வரும் 19ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Night
Day