ராமேஸ்வரம் : மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 இலங்கை மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களை விடுதலை செய்ய கோரி ராமேஸ்வர மீனவர்கள் கடந்த 9 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்திய மீனவர்களை விடுவிப்பது குறித்து, இரு நாட்டு தூதரக அதிகாரிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மீனவர்கள் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். 

Night
Day