ரூ.10,000 பணத்தை தவறவிட்ட இளைஞர்; பணத்தை போலீசில் ஒப்படைத்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஏடிஎம் மையத்தில் இளைஞர் தவறவிட்ட பணத்தை பத்திரமாக ஒப்படைத்த பள்ளி மாணவர்களுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். அலங்கியம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற ஹரிபிரசாத் என்பவர், 10 ஆயிரம் ரூபாயை எடுக்காமல் மறந்துவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து ஏடிஎம் மையத்திற்கு சென்ற 12ம் வகுப்பு மாணவர்கள் முகிலன், கௌசிக் ஆகியோர் பணத்தை எடுத்து சென்று, அலங்கியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அந்த இளைஞரை கண்டறிந்து பணத்தை ஒப்படைத்தனர். 

varient
Night
Day