வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் வட தமிழ்நாடு-தென் ஆந்திரபிரதேச கடற்கரையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் காலைக்குள் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும், தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நாளை மத்திய மற்றும் அதையொட்டிய தெற்கு வங்க கடலுக்கும், நாளை மறுநாள் முதல் வடக்கு வங்க கடலுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Night
Day