வண்டலூர் சாலையில் பழுதாகி நின்ற லாரியால் கடும் போக்குவரத்து நெரிசல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த வண்டலூர் சாலையில் டாரஸ் லாரி பழுதாகி நின்றதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரகடத்தில் உள்ள குவாரிக்கு சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி வண்டலூர் அருகே வரும்போது திடீரென பழுதாகி நின்றது. இதனால் 3 கிலோ மீட்டர் தூரம் அளவில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வண்டலூர் முதல் கண்டிகை வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து போலீசார் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Night
Day