வத்தலகுண்டில் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், வத்தலக்குண்டுவில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. திண்டுகல்லில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில், ஆத்தூர், வத்தலக்குண்டு, வீரக்கல், செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே குளம்போல் தண்ணீர் தேங்கியதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.

varient
Night
Day