வயநாடு மருத்துவமனையில் நலம் விசாரித்த ராகுல் மற்றும் பிரியங்கா

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிலச்சரிவில் கடுமையான பாதிக்கப்பட்ட பகுதியான சூரல்மலையில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப்ரியங்கா காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிக்கான நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆலோசனை நடத்தினர்.

Night
Day