வரும் 24ம் தேதி நடைபெறும் கீழக்‍கரை ஜல்லிக்‍கட்டு போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை கீழக்கரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கு இணையதளம் மூலமாக இன்று முதல் பதிவு செய்யலாம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் வரும் 24-ம் தேதி திறக்கப்படவுள்ளது. இதனையொட்டி, அன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தவிருப்பதால், மாடுபிடி வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் madurai.nic.in என்ற இணையதளம் வாயிலாக இன்று மதியம் 12 மணி முதல் நாளை மதியம் 12 மணி வரை பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாடுபிடி வீரர்கள் உடற் தகுதி சான்றுடனும், காளை உரிமையாளர்கள் காளைகளுக்கு மருத்துவச் சான்றுடனும் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்‍கப்பட்டுள்ளது. 

Night
Day