வரும் 28-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் பிரதமர் பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி வரும் 28-ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ளதை அடுத்து விழா நடைபெறும் பகுதிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிரதமர் மோடி வரும் 28-ஆம் தேதி தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு வெளித்துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இதனை முன்னிட்டு விழா நடைபெறும் இடத்தில் மேடை அமைப்பதற்காக கான்கிரீட் தளம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Night
Day