வருவாய்துறை அலுவலர்கள் நாளை முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-




தமிழகம் முழுவதும் வருவாய்துறை அலுவலர்கள் நாளை முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். பணி பாதுகாப்பு, காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வருவாய்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

Night
Day