வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவான்மியூரில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் கௌதமன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருவான்மியூரில் 3 பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதை கண்டித்து டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வழக்கறிஞர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால்  வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். 

Night
Day