வாகனங்களுக்‍கான உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் குறித்த வழக்‍கு : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்க தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு மார்ச் 26க்‍குள் பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச் செயல்கள், பாதுகாப்பு மீறல்களுக்காக வாகனங்களின் நம்பர் பிளேட்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்‍க , அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்துவதை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.  5 ஆண்டுகளாகியும்  தமிழகத்தில் இதுவரை எந்த நிறுவனங்களையும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் உற்பத்தி நிறுவனங்களாக தமிழக அரசு அறிவிக்கவில்லை எனக் கூறி, ஐயப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் பதிலளிக்‍குமாறு அரசுக்‍கு உத்தரவிட்டுள்ளது. 

Night
Day