வாகனத்தில் சென்றபோது ரூ.50 ஆயிரத்தை தவறவிட்ட நபர்; பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கேகே நகரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறவிட்ட 50 ஆயிரம் ரூபாயை போக்குவரத்து போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர். திருவல்லிக்கேணியில் வசித்து வரும் சிவசங்கர் என்பவர் நுங்கம்பாக்கத்தில் கொரியர் நிறுவனம் நடத்தி வருகிறார். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வங்கியில் பணத்தை எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் காசி திரையரங்கம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டு தவறி விழுந்துள்ளது. இதை கவனிக்காமல் சிவசங்கர் சென்றுள்ளார். இதனிடையே காசி திரையரங்கம் அருகே ரோந்து பணியில் இருந்த காவலர்கள் பணத்தை எடுத்துள்ளனர். பின்னர் ரூபாய் நோட்டில் இருந்த வங்கியை தொடர்பு கொண்டு சிவசங்கரின் தொலைபேசி எண்ணை வாங்கி அவரிடம் பணத்தை ஒப்படைத்தனர். போலீசாரின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Night
Day