வாட்ஸ்அப் மூலம் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்கால் அருகே வாட்ஸ்அப் மூலம் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்தில் போலீசார் தீவிர சோதனை செய்தனர். அப்போது, திருநள்ளாறு அருகே தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாட்ஸ்அப் மூலம் விற்பனை செய்த அஜீஸ், வீராச்சாமி, கனகசபை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 5 ஆயிரம் ரொக்கப்பணம், 3 செல்போன்கள் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

varient
Night
Day