வால்பாறையில் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் சிங்கவால் குரங்குகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையில் சுற்றி தெரியும் சிங்கவால் குரங்குகள் வாகனத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக  வனச்சரகத்திற்கு அருகாமையில்  புதுதோட்டம் பகுதியில் அடர்ந்த வனப் பகுதி உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் உள்ளன. இவைகளை வனத்துறையினர் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டினாலும், சாலையில் உலா வருவதால் வாகனங்களில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.

Night
Day