வால்பாறை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையை கடந்து சென்ற யானைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சாலையை கடந்து சென்ற யானைகளைக் கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

புதுத்தோட்டம் பகுதியில் வால்பாறை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் இன்று காலை திடீரென யானைகள் சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்தனர். அவர்கள், யானைகள் சாலையை கடக்கும்வரை தங்கள் வாகனங்களிலேயே காத்திருந்தனர். இந்த நிகழ்வை ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து, யானைகள் சாலைகளை கடக்கும்போது,யானைகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day