விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு - நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விறுவிறுப்பாக நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.  மாலை 5 மணி நிலவரப்படி 77 புள்ளி 73 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து, இத்தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 100-க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாலை 5 மணி நிலவரப்படி 77 புள்ளி 73 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 12-ம் தேதி எண்ணப்படுகிறது.

Night
Day