விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வான தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி, உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனால் நேற்று மாலை பிரச்சாரம் ஓய்ந்தது. வரும் 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

Night
Day