விசாரணைக்கு சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கு : மனுதாரருக்கு விசாரணை அறிக்கையை வழங்க நீதிபதி உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பல் பிடுங்கப்பட்ட வழக்கில் அமுதா ஐஏஎஸ் அதிகாரியின் விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்த நாளின் காவல் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சி மற்றும் விசாரணை அறிக்கையை வழங்கக்கோரி அம்பாசமுத்திரம் பகுதி அருண்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டுமெனவும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

Night
Day