விசைத்தறியாளர்கள் புதிய கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-வது நாளாக வேலை நிறுத்தம்!!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர், கோவை மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் 30-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஆண்டுக்கு 6 சதவீதம் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் காலவரையறையின்றி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு, ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தி ஏழாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், விசைத்தறியாளர்கள் போராட்டத்திற்கு திருப்பூர் கோன் அட்டை சிறு வியாபாரிகள் நல சங்கத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் 30-வது நாள் வேலைநிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளதால், ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு காடா துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. 30 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தும் கோரிக்கைகளை வலியுறுத்த அரசு செவி சாய்க்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, காலம் தாழ்த்தாமல் விளம்பர திமுக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Night
Day