விஜய் பிறந்தநாள் விழா- சிறுவனின் கையில் பற்றிய தீ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவன் கையில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலாங்கரையில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஏராளமான சிறுவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், ஓடு உடைக்கும் நிகழ்ச்சியின்போது 11வயது கிரிஷ்வா என்ற சிறுவன் கையில் தீப்பற்றியது. உடனடியாக பெற்றோர் வலியில் துடித்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், கராத்தே மாஸ்டர் ராஜன் என்பவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day