விமானப்படை சாகசம் - 2-ஆம் நாள் ஒத்திகை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சார்பில் சாகச நிகழ்ச்சிக்கான 2-ஆம் நாள் ஒத்திகை இன்றும் நடைபெற்றது.

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு வரும் 6ஆம் தேதி மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, 2வது நாளாக விமானப்படை வீரர்கள் இன்றும் சாகசத்தில் ஈடுபட்டனர். பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 70 விமானங்கள் பங்கேற்றன. ஹெலிகாப்டர்களில் இருந்து குதித்து, பாராசூட் மூலம் வீரர்கள் தரையிறங்குவது போன்ற ஒத்திகை நடைபெற்றது. விமானப்படை வீரர்களின் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Night
Day